துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. அதிலிருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குடியிருப்பு கட்டடத்தில் 764 வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கட்டத்தில் வசித்த 3820 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் உயிர்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்க, கட்டிடத்தின் மேம்பாட்டாளருடன் தொடர்புடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர். வெளியேற்றப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான சுகாதார மற்றும் உளவியல் ஆதரவை வழங்க ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.