சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல்…. மேலாளர் உட்பட 9 பேர் கைது

Estimated read time 0 min read

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்களை சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்படி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை காவல்துறையினர் நேற்று தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியை கண்காணித்தனர். அங்கு சிலர் பணம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தனியார் விடுதி மேலாளர் உட்பட 9 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டத்தில் பயன்படுத்திய 8 சீட்டு கட்டுகள் மற்றும் ரூபாய் 56400 பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author