ஜுன் 18ஆம் நாள் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு லூஜியாசுவெய் மன்றக்கூட்டத்தில், சீன மக்கள் வங்கியின் தலைவர் பான் கொங்ஷெங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, உலகளவில் எல்லை கடந்த பணம் செலுத்துதல் அமைப்புமுறையை மேம்படுத்துவதற்கான கோரிக்கை வலுத்து வருகிறது என்றார்.
மேலும், உயர் செயல்திறன், பாதுகாப்பு, அனைவரையும் உள்ளடக்கம், பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட திசையை நோக்கி, எல்லை கடந்த பணம் செலுத்துதல் அமைப்புமுறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. பத்துக்கும் மேலான ஆண்டுகளின் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியுடன், ரென்மின்பியைப் பயன்படுத்தும் அதிக வழிமுறைகள் மற்றும் பெரும் பரவல் கொண்ட எல்லை கடந்த பணம் செலுத்தல் வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.