தலாய் லாமா வாரிசுக்கு சீன அரசின் அங்கீகாரம் தேவையில்லை; உறுதியாக நிராகரித்தது இந்தியா  

Estimated read time 0 min read

தலாய் லாமாவின் அடுத்த மறுபிறவியை சீன அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற சீனாவின் கூற்றை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

இந்த முடிவு திபெத்திய ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தர்மசாலா சென்றுள்ள மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, தலாய் லாமா திபெத்தியர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வகிக்கிறார் என்றும், அவரது வாரிசைத் தீர்மானிக்கும் அதிகாரம் முற்றிலும் அவரிடமே உள்ளது என்றும் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author