ராஜ்யசபாவுக்கு மாறினார் சோனியா காந்தி 

ராஜஸ்தானில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை சோனியா காந்தி இன்று தாக்கல் செய்தார்.

இன்று அதிகாலை அவர் தனது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தியுடன் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

அவரை மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதற்கிடையில், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

அதில் ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸின் அகிலேஷ் பிரசாத் சிங் பீகாரிலும், அபிஷேக் மனு சிங்வி இமாச்சலப் பிரதேசத்திலும், சந்திரகாந்த் ஹண்டோர் மகாராஷ்டிராவிலிருந்தும் பரிந்துரைக்கப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author