தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-ல் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். முன்பெல்லாம் நண்பகலியே யார் ஆட்சி என்பதை கணித்துவிட முடியும். ஆனால், விஜய் கட்சி வாங்கும் வாக்குகளால் முடிவுகளை ஓரளவு கணிக்க மாலை வரை ஆகலாம். தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
