இன்று யுகாதி பண்டிகை : இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?

Estimated read time 0 min read

யுகாதியில் செய்ய வேண்டியவை :

* யுகாதி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி கோலமிட்டு, வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.

* அன்றைய தினம் காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து உடலையும், ஆன்மாவையும் தூய்மைபடுத்த வேண்டும்.

* அன்றைய தினம் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுவது உண்டு.

* வேப்பிலையை இனிப்பு சேர்த்து சாப்பிடுவது யுகாதியில் செய்யப்படும் மிக முக்கியமான சடங்கு ஆகும். இது வாழ்க்கையில் இனிப்பு, கசப்பு ஆகியவற்றை ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக செய்யப்படுவதாகும்.

* அறுசுவைகளும் கலந்த யுகாதி பச்சடி செய்து சாப்பிடுவது சிறப்பு உணவாக கருதப்படுகிறது. வாழ்க்கையிங் அனைத்தையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே இது செய்யப்படுகிறது.

யுகாதி கொண்டாடும் முறை:

மகிழ்ச்சி மற்றும் புதுமையின் துவக்கமாக இந்த நாள் அமைய வேண்டும் என்பதன் காரணமாக யுகாதி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதனால் நேர்மறையான எண்ணங்களுடன், நம்பிக்கை மற்றும் உற்சாகமாக புதிய ஆண்டை துவங்க வேண்டும். இது வளர்ச்சிக்கும் புதிய துவக்கத்திற்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் புதிய தொழில் துவங்குவது, புதிய சொத்துக்கள் வாங்குவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார். கர்நாடகாவின் சில பகுதிகளிலும் யுகாதி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதுடன், இறையருளை பெறுவதற்காக ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்வது உண்டு. இதனால் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

Please follow and like us:

You May Also Like

More From Author