இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு.
பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும் கூட. இந்து தமிழ் திசை இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர்.
இந்து தமிழ் நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான இந்து டாக்கீஸில் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.
இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைப்படப் பரிமாறியிருக்கிறார்.
யுகாதியில் செய்ய வேண்டியவை : * யுகாதி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து ரங்கோலி கோலமிட்டு, வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். [மேலும்…]
உலகெங்கிலும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மனிதாபிமானத்தின் உச்சமாக இந்தியா மீண்டும் ஒருமுறை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான கடுமையான [மேலும்…]
தெற்கு மத்திய இரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரயில்வே ஆட்சேர்ப்பு செல் [மேலும்…]
ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) , 2026 பதிப்பில் ஒரு புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன் களமிறங்குகிறது. [மேலும்…]
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான [மேலும்…]
உலகளவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி தடையின்றித் தொடர்கிறது. அதன் ஒரு பகுதியாக, ஐக்கிய [மேலும்…]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார். பூஞ்சேரியில் உள்ள [மேலும்…]
நல்லெண்ண பயணமாக சீனாவுக்கு வருமை புரிந்துள்ள துர்க்மேனிஸ்தானின் தேசிய தலைவரும் மக்கள் கமிட்டியின் தலைவருமான குர்பாங்குலி பெர்டிமுகமெடெவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் [மேலும்…]