இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு.
பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும் கூட. இந்து தமிழ் திசை இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர்.
இந்து தமிழ் நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான இந்து டாக்கீஸில் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.
இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைப்படப் பரிமாறியிருக்கிறார்.
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 27) சரிவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு விஷயங்களில் தலிபான்கள் [மேலும்…]
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று [மேலும்…]
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் [மேலும்…]
அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்க்கு சிறப்பு பேட்டி அளித்தார். 2035 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் முழு பொருளாதார அளவிலான நிகர பசுமை [மேலும்…]
இந்திய தலைமை நீதிபதி(CJI) பூஷண் ஆர். கவாய், தனக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க, மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை [மேலும்…]
80 ஆண்டுகளுக்கு முந்தைய அக்டோபர் 25ஆம் நாள், தைபெய் நகரில், ஜப்பான் சரணடைந்ததை சீன அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு [மேலும்…]
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையில், எல்ஐசி நிறுவனம் அதானி குழும நிறுவனத்தில் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு [மேலும்…]