இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்து விடுகிறார்கள்.
இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது.
அப்படிப்பட்ட சிறந்த படங்களைத்தான் நூலாசிரியர் நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார். இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு.
பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும் கூட. இந்து தமிழ் திசை இணைப்பிதழ்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர்.
இந்து தமிழ் நாளிதழின் வெள்ளிக் கிழமை சினிமா இணைப்பிதழான இந்து டாக்கீஸில் இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று.
இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது அட்டகாசமான, ஆழமான பார்வையைச் சுவைப்படப் பரிமாறியிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா [மேலும்…]
நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும், கிராமிய பின்னணி கொண்டத் திரைப்படமான ‘வடம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் [மேலும்…]
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT), நடுநிலைப் பள்ளி அளவில் (6 முதல் 8 ஆம் வகுப்பு) அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக, [மேலும்…]
பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (டிசம்பர் 13) டெல்லி சென்றார். அவர் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் [மேலும்…]
நாம் உறங்கும்போது உடல் ஓய்வெடுத்தாலும், நம்முடைய மூளை ஆச்சரியப்படும் விதத்தில் சுறுசுறுப்பாகவே இருக்கிறது. நாம் காணும் கனவுகள் மற்றும் திகிலூட்டும் கனவுகள் நம் மனம் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகிலேயே மூன்றாவது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. [மேலும்…]
இவ்வாண்டில் சீனாவின் செயற்கை நுண்ணறிவு தொழிலில் தீவிர வளர்ச்சி போக்கு காணப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் மைய தொழிலின் மதிப்பு, ஒரு இலட்சம் கோடி யுவானைத் [மேலும்…]
வார விடுமுறையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்பட்டது. கோயில் நடை [மேலும்…]