சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளார் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள் கூட்ட ம் 13-08-2025 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அதுபோது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.