லட்சுமி மேனனை கைது செய்யத்தடை

Estimated read time 0 min read

நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17 வரை கைது செய்யத்தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பாரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்களுக்கும் , ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன், 2 ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு; முன் ஜாமீன் கோரி நடிகை லட்சுமி மேனன் வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனை செப்டம்பர் 17 ஆம் தேதி கைது செய்ய தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொச்சியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் ஐ.டி. ஊழியரை கடத்தி, தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமின் கோரி லட்சுமி மேனன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரை கைது செய்ய தடை விதித்து, முன் ஜாமின் வழங்கியது கேரள உயர்நீதிமன்றம்

Please follow and like us:

You May Also Like

More From Author