6-வது முறையாக முழு கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை

Estimated read time 0 min read

மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக உள்ளது.

இதனால் நடப்பாண்டில் ஆறாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. இதனைதொடர்ந்து டெல்டா பாசனத்திற்கு 22 ஆயிரத்து 500 கன அடி நீரும், 16 கண் வெள்ள உபரி போக்கி வழியாக 12 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author