பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு:

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பு விலையை கோரி பஞ்சாப்-ஹரியானா எல்லை வழியாக டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.

இதனால், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் இன்று காலை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கிடையில், ஐந்தாவது சுற்று பேச்சு வார்த்தை விரைவில் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம், விவசாயிகளின் தலைவர்களிடம் ஏற்கனேவே 4 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறது.
4வது சுற்று பேச்சு வார்த்தையின் போது, பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு விலையில் (MSP) பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை கொள்முதல் செய்ய அரசாங்கம் முன்மொழிந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author