தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் [மேலும்…]
புதிய சர்வதேச தரை-கடல் வர்த்தக வழித்தடத்தின் முக்கியத் திட்டப்பணியான பிங்லு கால்வாய் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. அதோடு, சீனாவின் [மேலும்…]
சென்னை : 16-09-2026 நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து உலகம் முழுவதும் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய [மேலும்…]
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. [மேலும்…]
ஜப்பானில் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, விலா தசையில் ஏற்பட்ட காயம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன் செப்டம்பர் [மேலும்…]
13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் இதில் [மேலும்…]