தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடைசி நிமிடத்தில் நிலவும் எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இந்தியா வெளிச் சந்தையிலிருந்து (Spot Market) இயற்கை எரிவாயுவை அவசரமாகக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் [மேலும்…]
“வீட்டு வேலை செய்பவர்களின் சம்பளம் என்றால் சில ஆயிரங்கள் தான் இருக்கும்” என்ற பழைய கணக்கு இப்போது தவிடுபொடியாகி வருகிறது. ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் [மேலும்…]
தவெக கூட்டணி 28.82 சதவீத வாக்குகள் பெறும் என்று கருத்துக் கணிப்பி தெரியவந்துள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன [மேலும்…]
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களை இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது. இதனை ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு எரிவாயு பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகளைக் [மேலும்…]
மதுரையில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து எழுந்து வந்தது. இந்த நீண்டகால [மேலும்…]