தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாராமதியில் இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் [மேலும்…]
சீன அரசவையின் 4ஆவது ஊழல் தடுப்புப் பணிக் கூட்டம் 27ஆம் நாள் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் வலியுறுத்தியதாவது, புதிய யுகத்தில் ஷிச்சின்பிங்கின் [மேலும்…]
பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது! 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இனி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற [மேலும்…]
சட்டசபைத் தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிகளை இறுதி செய்வதில் [மேலும்…]
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வரலாற்று சிறப்பு மிக்க இந்தியா- ஐரோப்பிய யூனியன தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றொரு [மேலும்…]
ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்போது 2 முக்கிய அறிவிப்புகளை [மேலும்…]