தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்துசமய அறநிலையத்துறை மானிய திட்டத்தின் சட்டமன்ற ஒப்புதலைத் தொடர்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக [மேலும்…]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு [மேலும்…]
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நீக்கங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பாணியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து [மேலும்…]
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக [மேலும்…]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், இந்த கையிருப்பு 4.03 பில்லியன் [மேலும்…]
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அல்பேனிய [மேலும்…]