தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில், சுமார் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் [மேலும்…]
புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கணிசமாக உயர்ந்து நிறைவடைந்தன. சென்செக்ஸ் 609.45 புள்ளிகள் அல்லது [மேலும்…]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் பாரம்பரிய கப்பல் பயண வழியின் பாதுகாப்பு பாதிப்படையும் அபாயங்கள் அதிகரிக்கும் நிலையில், இலங்கை, அமெரிக்கா, ஸ்பெயின் [மேலும்…]
பனாமாவில் உள்ள துறைமுகம் தொடர்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் [மேலும்…]
சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண திறனை உயர்த்துவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஏப்ரல் [மேலும்…]
அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹81,000 கோடி மதிப்பிலான ‘மகா நிகோபார் பெருந்திட்டத்தை’, “நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று” என்று [மேலும்…]