தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (வியாழக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். இன்றும், நாளையும் (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்தில் சிவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓசூர் பேளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்டு ஏவியேஷன் லிமிடட், ஓசூர் நல்லூர் எல்காட், ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலை கல்லூரிகளில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார்.
எனவே மேற்கண்ட இடங்களை மையமாக கொண்டு 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சிவில் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்றும், நாளையும் எந்தவொரு சிவில் டிரோனையும் பறக்கவிட அனுமதி இல்லை.
இந்த அறிவிப்பை மீறி டிரோன்களை இயக்கும் நபர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-ன் பிரிவு 163-ன் சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடர்புடைய அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் டிரோன்களை பறக்க விடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய விமானப்படைக்கு (IAF) சொந்தமான ஏஎன்-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் விபத்துக்குள்ளானது. தளத்தில் ஏஎன்-32 [மேலும்…]
சென்னை : தமிழக அரசியல் மற்றும் பொதுவெளியில் புதிய பரபரப்பைக் கிளப்பும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரையோ, அவரது புகைப்படங்களையோ எந்த ஒரு [மேலும்…]
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய [மேலும்…]
சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவரும் [மேலும்…]
ஜப்பான் தேசிய பாதுகாப்புடன் தொடர்பான 3 ஆவணங்களைத் திருத்துவது குறித்து அரசுக்கு ஒப்படைக்கும் வரைவு ஒன்றை ஜப்பானின் லிப்ரல் ஜனநாயக கட்சி அண்மையில் அங்கீகரித்துள்ளது. [மேலும்…]
யுன்னான் மலர்களின் ராஜ்ஜியம் மட்டுமல்ல, ஒரு முக்கிய காபி உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது. இங்கிருந்து 2025இல் 19000 டன் காபி 43நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு [மேலும்…]
அசாமின் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று (ஜூன் 13) காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]
இனி ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் கணக்குகள் குறித்து தகவல் அளிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு நிதியாண்டில் உங்களின் அனைத்து வங்கிக் [மேலும்…]