தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இடி மின்னலுடன் கூடிய மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தின் 30 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி இன்று அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, விழுப்புரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் வானிலை மாறுபாடுகளுக்கேற்ப பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.