3 புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

Estimated read time 1 min read

பிரதமர் மோடி மூன்று புதிய ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்:

பிகானீர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் மற்றும் டெல்லி கன்டோன்மென்ட் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் உதய்பூர் சிட்டி-சண்டிகர் எக்ஸ்பிரஸ்.இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும் மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • புறப்படும் நேரம் (ஜோத்பூர்): காலை 5 : 25
  • சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): மதியம் 1:30
  • திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை3 : 10-க்கு புறப்பட்டு இரவு 11.20-க்கு ஜோத்பூரை சென்றடையும்.
  • சேவை நாட்கள்: வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படும்.
  • நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள மேர்தா ரோடு, தேகனா, மக்ரானா, புலேரா, ஜெய்ப்பூர், மற்றும் ஆல்வர் ஆகிய நிலையங்களிலும், ஹரியானாவில் உள்ள ரேவாரி மற்றும் குர்கான் ஆகிய நிலையங்களிலும் இந்த ரயில் நின்று செல்லும்.
    • பிகானேர்டெல்லி வழித்தடம்
    • புறப்படும் நேரம் (பிகானேர்): காலை 5 : 40
    • சென்றடையும் நேரம் (டெல்லி கண்டோன்மென்ட்): காலை 11:05
    • திரும்பும் பயணம் (டெல்லியில் இருந்து): மாலை 4:45-க்கு புறப்பட்டு இரவு 11.05-க்கு பிகானேரை சென்றடையும்.
    • நிற்கும் நிலையங்கள்: ராஜஸ்தானில் உள்ள ரத்தன்கர், சுரு, சத்ல்பூர் மற்றும் ஹரியானாவில் உள்ள லோஹாரு, மகேந்திரகர், ரேவாரி, குர்கான் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

    தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள்

    வடமேற்கு ரயில்வே மண்டலம் (North Western Railways – NWR), இந்த இரண்டு புதிய ரயில்களுடன் சேர்த்து மொத்தம் நான்கு வந்தே பாரத் ரயில்களை இயக்குகிறது. அவை:

    1. அஜ்மீர் – சண்டிகர் (ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி வழியாக)
    2. ஜெய்ப்பூர் – உதய்பூர்
    3. ஜோத்பூர் – சபர்மதி
    4. உதய்ப்பூர் – ஆக்ரா

    இந்த வந்தே பாரத் ரயில்கள், ராஜஸ்தானின் பல்வேறு நகரங்களை டெல்லி மற்றும் பிற மாநிலங்களுடன் இணைத்து, பயண நேரத்தைக் குறைக்கும்.

    Please follow and like us:

    You May Also Like

    More From Author