தமிழகத்திற்கு இன்னொரு ‘சைனிக்’ பள்ளி..!!

Estimated read time 1 min read

நாடு முழுதும் 33 சைனிக் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், உடுமலைப்பேட்டையை அடுத்த அமராவதி நகரில் ஒரு பள்ளி உள்ளது.இப்பள்ளி 1962ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 1975 வரை சைனிக் பள்ளி மெட்ராஸ் (SSM ) என அழைக்கப்பட்டது. அதன் பின், அமராவதி நகர் சைனிக் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் உண்டு உறைவிடப்பள்ளியாக இப்பள்ளி உள்ளது.

இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டப்படி செயல்படும் ஆங்கில வழிப் பள்ளியாக இருப்பினும், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நடக்கிறது. பாடத்திட்டத்துடன், குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்தும் கற்றுத்தரப்படுகின்றன.

கடந்த ஆண்டு நாடு முழுதும் புதிதாக 19 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளியில் 6 மற்றும் 9ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமையின் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெற்று பள்ளியில் சேர்வோருக்கு பொதுப்பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படையில் அதிகாரிகளாக சேர்வதற்கும் மாணவர்களுக்கு இப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மூன்று பள்ளி களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாமக்கல் குடியிருப்பு ஸ்ரீ எஸ்.பி.கே., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, சைனிக் பள்ளியாக மாற உள்ளது.
Please follow and like us:

You May Also Like

More From Author