ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்வு… முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!! 

Estimated read time 0 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிறுபான்மையினர் நலனுக்காக ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்துள்ள உலமாக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மூன்று ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் இனி ஐந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

மேலும், இஸ்லாமிய சமூகத்தினர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையான கல்லறைத் தோட்டம் இல்லாத பகுதிகளில், தகுந்த அரசு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒதுக்கீடு செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிர்வாக வசதிக்காகவும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் சென்னை மற்றும் மதுரை நகரங்களைப் போலவே கோவையிலும் புதிய வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், உலமாக்களின் பயண வசதிக்காக முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க தலா ஐம்பதாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மையின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக திமுக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என அவர் இந்த மாநாட்டில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author