ஜி20 உச்சி மாநாடு – நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!

Estimated read time 0 min read

20ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 21ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி20 நாடுகள் பங்கேற்கும் 20ஆவது ஜி20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தென்னாப்பிரிக்காவுக்குச் செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி20 மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

23ஆம் தேதி வரையிலான இந்தப் பயணத்தில், இந்தியா – பிரேசில் – தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author