தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்..!

Estimated read time 1 min read

தமிழ் மொழி, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்த தமிழறிஞர் சிவா பிள்ளை காலமானார்.

1990களின் இறுதியில், இலங்கையின் வட, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் கணினி வசதிகளும், மின்சார வசதிகளும் குறைவாக இருந்த காலத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி, வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் திகழ்ந்தார்.

விடுமுறைகளைக் கூட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அல்லாது, தொலைதூர கிராமங்களை சென்று, கணினி விழிப்புணர்வு, தமிழ் கணினியியல், தமிழ் தட்டச்சு மற்றும் மென்பொருள் பயன்பாடு போன்றவற்றை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கொண்டு செல்ல அவர் அர்ப்பணித்தார்.

தமிழ் இணையம் / தமிழ் கணினியியல் வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. INFITT தமிழ் இணையத் தமிழியல் மாநாடுகளில் தொடர்ந்து கலந்துகொண்டு, ஆழமான ஆய்வு, கருத்துகள், வழிகாட்டுதல்கள் மூலம் உலகத் தமிழர் கணினியியல் வட்டாரத்தில் மதிப்புமிக்க மரியாதையைப் பெற்றார்.

ஐக்கிய இராச்சியத்தில் தமிழ்மொழிக் கல்விக்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதிலும், திருவள்ளுவர் சிலை போன்ற தமிழ் மரபை உயர்த்தும் முயற்சிகளிலும் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ் மரபு, மொழி, கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்ற அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சமூக சேவையும் காரணமாக, அவரை சந்தித்த அனைவரும் அவரை வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் கண்டுள்ளனர்.

அவரது இழப்பு தமிழ் உலகத்திற்கு பெரிய துயரம் என்றாலும், அவர் தொடந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக முன்னோடிகளின் மூலம் அவரது சிந்தனைகளும் பணிகளும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author