சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா- குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி

Estimated read time 0 min read

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பல மாதங்களாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும், நான்கு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட நிறைவேற்றப்பட்டது. மேலும், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள கருத்துகளை நிராகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஒப்புதலுக்கு இந்த சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author