சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் சீன அரசு சார் தொழில்நிறுவனங்களின் பணிகள் குறித்து முக்கிய உத்தரவிட்டார். இதில் அவர் கூறுகையில், கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், நாட்டின் பொருளாதாரத்தில் அரசு சார் நிறுவனங்கள் ஆதாரத் தூணாகப் பங்காற்றியுள்ளன. தோளிலுள்ள பொறுப்புகளை இந்நிறுவனங்கள் முழுமையாகப் புரிர்ந்துணர்ந்து கட்சி மற்றும் நாட்டின் பணிக்கு மேலும் செவ்வனே சேவையளிக்க வேண்டும். பொருளாதார மற்றும் சமூகத்தின் உயர் தர வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்துக்கும் உத்தரவாதம் மற்றும் சேவையளிக்க வேண்டும். மேலும், சமூகப் பொறுப்பேற்று சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் கட்டுமானத்துக்கு மேலதிக ஆற்றலைக் கொண்டு வர வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
அரசுசார் நிறுவனங்களுக்கு ஷிச்சின்பிங் உத்தரவு
You May Also Like
More From Author
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!
January 16, 2026
உயர்தர வரையறை விளை நிலத்தின் கட்டுமானத்தை சீனா விரைவுபடுத்தும்
December 23, 2025
