தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் தருவாயிலும், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, ஜனவரி 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி: ஜனவரி 9, 10 தேதிகளில் கனமழை
