குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

Estimated read time 1 min read

பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 13-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு அருவிக்கரை களைகட்டியது.

You May Also Like

More From Author