பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவான ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால், இதன் அதிர்வுகள் பரவலான பகுதிகளில் மிக பலமாக உணரப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உடனடி உயிர்ச்சேதங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்பு பாதிப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.
மேலும் கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸில் மீண்டும் அதிர்வு! மிண்டானோ தீவை உலுக்கிய 6.5 ரிக்டர் நிலநடுக்கம்! அடுத்தடுத்து நகரும் டெக்டானிக் தட்டுகள்
