222 பயணிகள்…. ஒரு டிஷ்யூ பேப்பர்…. இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. நடுவானில் பதப்பதைக்கும் சம்பவம்….!! 

Estimated read time 0 min read

டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதிக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்று ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது.

அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 229 பேர் இருந்தனர். விமானம் வானத்தில் உயரே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், உடனடியாக விமானத்தை லக்னோ விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினர்.

விமானத்தை முழுமையாகச் சோதனையிட்டபோது, விமானத்தின் கழிவறையில் ஒரு டிஷ்யூ பேப்பர் கண்டெடுக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. முதற்கட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்றாலும், அந்த டிஷ்யூ பேப்பரை அங்கு வைத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author