ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஸ்ரீநகர், லே மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையாக உணரப்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
நிலநடுக்கத்தின் மையம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் சுமார் 200 கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மற்றும் லடாக்கை தவிர, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது பெரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.
காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு
