வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தரவு தனியுரிமை நடைமுறைகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த்,”எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது… எங்கள் தரவின் ஒரு இலக்கத்தைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று கூறி நிறுவனத்தை கண்டித்துள்ளார்.
மேலும் இந்திய சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் மெட்டா இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்றும் கூறினார்.
டிஜிட்டல் சகாப்தத்தில் பயனர் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்த வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த உத்தரவு வந்துள்ளது.
வாட்ஸ்அப்பின் privacy policy குறித்து மெட்டாவை எச்சரித்தது உச்ச நீதிமன்றம்
