தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் வெளியாகிறது என்றால், அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும்.
ஆனால், தற்போது ஒரு முன்னணி சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தமிழ்நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜன நாயகன்’ படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் என நம்பி, பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்ற படங்களைத் திரையிடாமல் தியேட்டர்களை ஒதுக்கி வைத்திருந்தனர்.
தற்போது படம் வெளியாகாததால், டிக்கெட் முன்பதிவு வருமானம் இன்றி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஜன நாயகன்’ வெளியீடு தாமதமாவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ரூ.100 கோடி இழப்பு
