பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

Estimated read time 0 min read

சென்னைக்கான பாதுகாப்பு எல்லையாக இருந்த 9.69 ஏக்கர் நிலத்தை திமுக பிராந்திய அரசு எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசவிரோதிகள் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம், அந்த வகையில் சென்னை அடையாறை ஒட்டிய பகுதிகளில் கடற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலம் கடந்த 2014ம் ஆண்டு கடல்நீரால் சூழப்பட்டதால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையின் பாதுகாப்பு கருதி கடற்படைக்கென 9.69 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்.

242 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தில் பயிற்சி மையம் அமைக்க தாமதம் ஏற்பட்டதால் எந்தவித முன்னறிவிப்புமின்றி திமுக பிராந்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை கடற்படையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சந்தித்தும் எவ்வித பலனும் இல்லை எனக்கூறப்படுகிறது. தலைநகர் சென்னையின் பாதுகாப்பை கருதி கொடுக்கப்பட்ட நிலத்தை திமுக அரசு கையகப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author