பிப்.28ம் தேதி மதுரை எய்ம்சை திறக்கிறாரா பிரதமர் மோடி?

Estimated read time 0 min read

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பதாக வந்த தகவலுக்கு மதுரை எய்ம்ஸ் இயக்குனர் அனுமந்த ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தகவல் வெளியானது.இந்நிலையில் அது குறித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் கூறுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 28ஆம் தேதி பிரதமர் திறந்து வைப்பதாக வெளியாகி உள்ள தகவல் உண்மை இல்லை. திட்டமிட்டபடி கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு போன்றவற்றிற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் பயிலும் மதுரை எய்ம்ஸ் நான்காம் ஆண்டு மாணவர்கள் இரண்டு பேட்ச்சுகளும் மதுரைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கு வகுப்பறை ஆண்கள், பெண்கள் என மாணவர்கள் விடுதிகள் தயாராக இருக்கும். அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் புறநோயாளி பிரிவு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.

You May Also Like

More From Author