இந்திய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை வர்த்தகத்தில் கடும் விற்பனைப் போக்கு நிலவியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைக் கண்டன.
பிஎஸ்இ சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 75,474 என்ற அளவையும், என்எஸ்இ நிஃப்டி 260 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து 23,606 என்ற நிலையையும் தொட்டன.
இதன் காரணமாக பிஎஸ்இ பட்டியலில் உள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.6 லட்சம் கோடி வரை குறைந்து முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது.
பங்குச் சந்தையில் ஒரே நாளில் ₹6 லட்சம் கோடி காலி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிய முக்கிய 5 காரணங்கள்
