அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார்.
டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான அழைப்பை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் தலைவர்கள் பரஸ்பர வர்த்தகம் குறித்த இடைக்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை எட்டினர்.
வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, அழைப்பின் போது, ”ரஷ்ய கூட்டமைப்பு எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக” இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கூடுதல் 25% வரியை நீக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
