இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் (110,350 டாலர்) அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான தகுதிச் சான்றிதழ் இன்றி, ஒரு ஏர்பஸ் விமானத்தை எட்டு முறை இயக்கியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபரீதச் செயல் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை மீறியது மட்டுமல்லாமல், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பெருமளவு குறைத்துள்ளதாக டிஜிசிஏ தனது ரகசிய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம்: டிஜிசிஏ அதிரடி
