மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அந்த நாட்டிற்கு நடக்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
47 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை மட்டுமே நடப்பதாகவும், ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
ஈரானின் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இந்தப் பிரச்சனைகளுக்கு ஒருமுறை முற்றுப்புள்ளி வைப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
