தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்களிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேசத் தொடங்கியபோது, திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எங்கே என்று கூச்சலிட்டு தொடர் கோஷங்களை எழுப்பினர்.
திமுக ஊழல் ஆதாரங்கள் மேஜையில் உள்ளன: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
