மென்பொருள் துறையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் முன்னணி இசை செயலியான ஸ்பாடிஃபை, தனது உயர்மட்ட மென்பொருள் பொறியாளர்கள் 2025 டிசம்பர் மாதம் முதல் ஒரு வரி கோடிங் கூட கைப்பட எழுதவில்லை என்ற அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்குப் பதிலாக, அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள ஹான்க் ஏஐ என்ற சொந்த ஏஐ தொழில்நுட்பமே அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறது.
