வரும் 18-ம் தேதி இந்தியாவுக்கு வரும் பிரேசில் அதிபர்!

Estimated read time 1 min read

பிரேசில் அதிபா் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வரும் 18-ம் தேதி 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வரவுள்ளாா்.

தில்லியில் பிப்ரவரி 19 முதல் 20 வரை சா்வதேச ஏஐ உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவா்கள், உயா்நிலை பிரதிநிதிகள், துறைசாா் நிறுவனத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக பிரேசில் அதிபா் லுலா டா சில்வா பிப்ரவரி 18-இல் இந்தியாவுக்கு வரவுள்ளாா்.

பிரதமா் மோடி-பிரேசில் அதிபா் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை வரும் 21-இல் நடைபெறவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author