இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஆகியோர் சனிக்கிழமை (பிப்ரவரி 21, 2026) டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்படும்போது, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான குளோபல் சவுத் குரல் சர்வதேச அரங்கில் அதிக தன்னம்பிக்கையுடனும் வலிமையுடனும் ஒலிக்கும் என்று தெரிவித்தார்.
சமகால சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
குளோபல் சவுத் நாடுகளின் குரல் இனி உலகளவில் ஓங்கி ஒலிக்கும்: பிரதமர் மோடி
