கூட்டணி கட்சியாக இருந்தும் விடாத ஜோதிமணி – டிஜிபி அலுவலகத்தை அதிரவைத்த அந்த ஒரு அறிக்கை…!!! 

Estimated read time 0 min read

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் தமக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய காவல்துறை காலம் தாழ்த்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் புகார் அளிக்கப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும், குற்றவாளியைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்படவில்லை என்றும், இது காவல்துறையின் செயல்பாட்டில் பாஜகவின் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இதனால் பெண்களுக்கு எதிராகப் பொதுவெளியில் இழைக்கப்படும் இத்தகைய வன்முறைகள் தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், இது பெண்களின் குரலை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் அரசியல் ஆயுதம் என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்நிலையில் ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோதிலும், காவல்துறையின் இப்போக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட ஜோதிமணி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author