தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நெருக்கடியில் இருந்த இந்திய கிரிக்கெட் அணி, நேற்று (பிப்ரவரி 26) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் விஸ்வரூபம் எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் ஷர்மாவின் அதிரடி 55 (30 பந்துகள்) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ருத்ரதாண்டவம் 50* (23 பந்துகள்) ஆகியவற்றால் 20 ஓவர்களில் 256/4 ரன்களைக் குவித்தது.
இது டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 257 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெற்றி ஒன்றுதான் வழி; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால் மட்டுமே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு
