உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருவதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஐநா மற்றும் உலக நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், இல்லையெனில் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
