இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ள பொருளாதார மண்டலத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஈரான் நாட்டு கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இலங்கை அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து வியாழக்கிழமை (மார்ச் 5) அன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, “கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைக் காக்க எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறோம்” என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பல்: மாலுமிகளைக் காக்க இலங்கை அரசு தீவிரம்
