14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கினார்.
இந்த அரசுப் பணியறிக்கையில், 2025ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்கும் கடமைகளும் தங்கு தடையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், பொருளாதாரம் நிதானமான நிலையில் முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காடு அதிகரித்து 140.19 140.19 டிரில்லியன் யுவானை எட்டியுது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
