மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீனாவின் சிறப்புத் தூதர் ஸாய்ஜுன் மார்ச் 8ஆம் நாள் சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டு, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைமைச் செயலாளர் புடைவி, சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் ஃபைசல் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்பு நடத்தினார்.
ஸாய்ஜுன் கூறுகையில், தற்போது பிரதேச சூழ்நிலை சிக்கலாக உள்ளது. பல்வேறு தரப்புகள் போரை உடனடியாக நிறுத்தி, வெகுவிரைவில் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார். மேலும், சீனா தொடர்ந்து பயனுள்ளதாகப் பங்காற்றி, வளைகுடா பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு அயராத முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
