சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் பேரவையால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, சீன தேசிய மக்கள் பேரவை நிர்ந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லேச்சி இந்த அமர்வில் நிரந்தர கமிட்டியின் பணிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில்,
2025ஆம் ஆண்டில் இக்கமிட்டியின் பணிகள் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளன. முதலில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான நடைமுறையையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தி, தேசிய சட்ட அமைப்பின் முழுமையை இக்கமிட்டி பேணிக்காத்தது. இரண்டாவது, சட்டமியற்றல் பணி வலுப்படுத்தப்பட்டது. மூன்றாவது, கண்காணிப்பு பொறுப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. நான்காவது, மக்கள் பேரவை பிரதிநிதிகளின் பங்கை வலுப்படுத்துவது. ஐந்தாவது, நாட்டின் தூதாண்மை பணிக்கு துணை புரிந்தது. ஆறாவது, சட்டத்தைப் பின்பற்றி, பொறுப்பு ஏற்கும் திறனையும் தரத்தையும் அதிகரித்தது என்று அவர் தெரிவித்தார்.
