மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று ஒரே நாளில் 6 ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்திய தாக்குதலால் வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இருப்பினும், அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை இதுவரை சுமார் 304 ஏவுகணைகளையும், 1,627 ட்ரோன்களையும் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
