வீழ்ச்சியிலிருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு: ரூ.94க்கும் கீழ் வந்தது எப்படி?  

Estimated read time 0 min read

கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு டாலரின் மதிப்பு ₹94.84 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை (மார்ச் 30) ரூபாய் மதிப்பு அதிரடியாக ஒரு சதவீதம் உயர்ந்து ₹93.85 என்ற நிலைக்கு வந்துள்ளது.
இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) மிக முக்கியமான மற்றும் தீர்க்கமான தலையீடு இருப்பதாகத் தெரிகிறது.
ரூபாயின் சரிவைத் தடுக்க ஆர்பிஐ மேற்கொண்ட இந்த நடவடிக்கை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author