சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ரமஃபோசாவும் ஆகஸ்ட் 24ஆம் நாள் வியாழக்கிழமை ஜோகன்னஸ்பர்க் நகரில் சீன-ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குக் கூட்டாக தலைமை தாங்கினர்.

இதில் நவீனமயமாக்கத்தை முன்னெடுத்து சீனா மற்றும் ஆப்பிரிக்கா இடையேயான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.


சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆப்பிரிக்க நவீனயமாக்கத்திற்கு உதவி வழங்குவதற்கும் ஆப்பிரிக்காவின் தொழிலாக்கத்தை ஆதரிப்பதற்கான முன்னெடுப்பை தொடங்கி வைப்பது, ஆப்பிரிக்காவின் வேளாண்மை நவீனமயமாக்கத்திற்கு உதவி செய்யும் திட்டத்தை செயல்படுத்துவது, சீன-ஆப்பிரிக்க திறமை வளர்ப்புக்கான ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய மூன்று முன்மொழிவுகளை ஷிச்சின்பிங் முன்வைத்தார்.


மேலும், அடுத்த ஆண்டு சீன–ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றக்கூட்டம் சீனாவில் நடைபெறும் என்றும் ஷிச்சின்பிங் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author