பீகார் அரசியலின் முக்கிய முகமான நிதிஷ் குமார், தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இந்தத் திடீர் முடிவு பீகார் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியையும் வலுக்க செய்துள்ளது.
நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தைச் சட்ட மேலவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
நீண்ட காலமாக பீகார் அரசியலில் ‘கிங் மேக்கராக’ விளங்கிய நிதிஷ் குமாரின் இந்த நகர்வு, அவர் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் கவனம் செலுத்தப் போகிறாரா அல்லது ஆளும் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.
பீகாரில் மீண்டும் அரசியல் புயல்! நிதிஷ் குமார் ராஜினாமா, அடுத்த முதல்வர் யார்?
