திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடந்த பிட்சாடனர் வீதி உலா வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 25ஆம் நாள் நிகழ்ச்சியான பிட்சாடனர் வீதியுலா வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அகோர மூர்த்தி, பிட்சாடனர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பிட்சாடனர் கோயிலில் இருந்து புறப்பட்டு சிவ வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து ஆழித்தேரை 3 முறை வலம் வந்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
